வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் 23 குற்றங்களுக்கே அபராதம் அறவிடப்பட்டது. இந்நிலையில் தண்டப்பணம் எதிர்வரும் 15ம் திகதி முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி போக்குவரத்து விதி மீறலுக்கான குறைந்தபட்ச தண்டப்பணம் 500 ரூபாவாகும். அதனை ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். தண்டப்பணத்தை செலுத்துவதற்கென வழங்கப்பட்டிருந்த 14 நாட்களுக்கான அவகாச காலம் 28 தினங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அதன்போது அறவிடப்படும் கட்டணத்தொகை இரண்டு மடங்காக காணப்படுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.