பொதுவாக, கிறிஸ்தவ குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் சடங்கு நடைபெறும் அந்தவகையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிகளின் மூன்றாவதாக ஆண் குழந்தையான இளவரசர் லூயிஸ்க்கு நேற்று ஞானஸ்நானம் அளிக்கும் சடங்கு இடம்பெற்றுள்ளது.
கடந்த 23-4-2018 அன்று இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிகளின் 3 வது ஆண் குழந்தையாக இளவரசர் லூயிஸ் பிறந்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஜோர்தான் நதியின் நீரால் இளவரசர் லூயிஸ்-க்கு ஞானஸ்நானம் அளிக்கும் விழாவை கேண்ட்டர்பரி நகரின் தலைமை பேராயர் தலைமையேற்று நடத்திவைத்துள்ளார்.
இந்த விழாவில் மறைந்த டயானாவின் கணவரும், இளவரசர் வில்லியம்ஸின் தந்தையும், பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் தனது மனைவி கமில்லாவு, இளவரசர் ஹாரி – மேகன் மற்றும் வில்லியம் – கேட் தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், கேட்டின் பெற்றோர், சகோதர – சகோதரிகள் மற்றும் அரச குடும்பத்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அத்துடன் குட்டி இளவரசரின் ஞானஸ்நான விழாவில் ராணி எலிசபத் தவிர்க்க முடியாத கரணம் நிமித்தம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.