கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபரும் இன்னுமொருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அநுராதபுரம்-வன்னியக்குளம் பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடந்த 5ஆம் திகதி மோட்டார் காரில் பயணம் செ;து கொண்டிருந்த 45 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலேயெ சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்தும விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.