கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரமளவில் விநியோகிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அனுமதி அட்டைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் செப்டம்பர் முதலாம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வருடம் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரமளவில்..
படிக்க 0 நிமிடங்கள்