7 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று காணாமல்போயுள்ளது. கடந்த மாதம் 14ம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லையென மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிக்கடுவை, தெல்வத்த மற்றும் தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் கடலுக்கு சென்ற நாளிலிருந்து உறவினர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். எனினும் கடந்த 29ம் திகதிக்கு பின்னர் தொடர்புகொள்ளவில்லையென உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது
படிக்க 0 நிமிடங்கள்