கெனடாவில் அதிக உஷ்ணம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளது. 50 முதல் 80 வயதானவர்களே அதிகளவில் மரணித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக உஷ்ணம் காரணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வெப்பமான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென கெனடா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.