வெல்லவாய மதுரகல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலினால் 50 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது. தொடர்ந்தும் தீ வேகமாக பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவிப்புக்கமைய இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடும் காற்றுடன் கூடிய வறட்சியான வானிலையினால் தீயை அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.