சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட மாணிக்க கற்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்கொக்கிலிருந்து வருகை தந்த சீன பெண் ஒருவரிடமிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 48 இலட்சத்து 64 ஆயிரத்து 777 ரூபா என சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு பெங்கொக்கிலிருந்து வருகை தந்த சீனப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பண்டாரநாயக்க விமான நிலையத்தின் பிரகடனப்படுத்துவதற்கு பொருட்கள் ஏதுமற்ற பயணிகள் செல்வதற்கான வழியில் இவர் செல்ல முயன்ற போது சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இவரிடமிருந்து ஏராளமான இரத்தினகற்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி 48 இலட்சத்து 64 ஆயிரத்து 777 ரூபா ஆகும்;. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என தெரிவித்தார்.