ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண போட்டிகள் குழுநிலை போட்டிகளை தொடர்ந்து இடம்பெற்ற ரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் சுவிடன் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதியானது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து கொலம்பியாவை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கோல் அடிப்படையில் சுவிடன் தோற்கடித்தது. 1994 ஆம் ஆண்டின் பின்னர் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் காலிறுதி போட்டிக்கு சுவிடன் தகுதி பெற்றுள்ளது. இதேவேளை கொலம்பியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி 1-1 எனும் கோல் அடிப்படையில் மு:டிவடைந்ததால் மேலதிக றேரம் வழங்கப்பட்டது. இதன் போது இரண்டு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இதனையடுத்து பெனால்டி சூட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கொலம்பிய வீரர்கள் 3 கோல்களை போட இங்கிலாந்து 4 கோல்களை போட்டு வெற்றி பெற்றதுடன் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. நாளை மறுதினம் காலிறுதி சுற்று போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அன்றைய தினம் உருகுவே பிரான்ஸையும். பெல்ஜியம் பிரேஸிலையும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. 7 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் ரஷ்யா குரேசியாவுடனும் சுவிடன் இங்கிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.