வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் காணாமல்போயிருந்த இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 17ம் திகதி 22 வயதான குறித்த இளைஞன் காணாமல்போயிருந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.