மெக்சிகோ ஜனாதிபதிதேர்தலில் இடதுசாரி வேட்பாளராக என்ரஸ் மெனுவல் லோபேஸ் ஒப்ராடோரின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் மெக்சிகோ சிட்டியின் முன்னாள் மேயர் 53 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் இது அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிகமாகுமென வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டதுடன் லோபேஸிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சி வேட்பாளரான ஜோஸ் என்டோனியோ மீடே இத்தேர்தலில் 3 ஆம் இடத்தை அடைந்துள்ளதுடன் ஒப்ராடோவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் கென்சவேர்ட்டிவ் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிக்காயோ அனாயா 2 வது இடத்தை பெற்றுள்ளார். அவரும் தனது வாழ்த்துக்களை ஒப்ராடோவுக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் செய்தி மூலம் லோபேஸ் ஒப்ராடோவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 130 இற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.