புராதன பெருமைவாய்ந்த இரண்டு ஜோடி யானை தந்தகளுடன் சந்தேக நபர் ஒருவர் பிலிமத்தலாவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிமத்தலாவ பமுனுவ பகுதி வீடொன்றில் யானை தந்தங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கண்டி மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை சேர்ந்த தொல்பொருள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் வர்த்தகர்கள் போன்று மாறு வேடத்தில் சென்று இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்விரண்டு யானை தந்தங்களும் தலா 55 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு ஜோடி யானை தந்தம் பஸ்கம தேவாலயத்திலிருந்து திருடப்பட்டவையென பொலிஸார் தெரிவித்தனர். இப்புராதன யானை தந்தங்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அறிக்கையொன்றும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.