பிரேசில் நாட்டைச்சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடனேயே அவர் கைதாகியுள்ளார்.66 கொக்கைன் வில்லைகள் அவருடைய வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.சந்தேகநபரை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.