சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்காக 900 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் புதிய ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்களென சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துகொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். நியமனங்கள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி வழங்கப்படும். முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் தகுதிவாய்ந்தவர்கள் தெரிவுசெய்யப்படுவார்களென சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.