விவசாய காப்புறுதி நிதியை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சான்று பத்திரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை விவசாய மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய காப்புறுதி சான்று பத்திரங்களை விரைவில் விவசாயிகளிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொண்ட நட்டங்களுக்காக 145 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு காப்புறுதி நிதி வழங்கப்பட்டதாக விவசாய மற்றும் கமநலசேவை காப்புறுதி சேவை தெரிவித்துள்ளது.