கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த விடயங்களில் ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை பெறுவதாக உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ரல்ப் வான் டூர்ப் தெரிவித்தார்.