விவசாயத்துறையில் தொழில்நுட்ப புரிந்துணர்வினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அமெரிக்கா மேச்சன்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திடவுள்ளது.
இதன்மூலம் விவசாயத்துறையில் ஆய்வு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இதேபோன்று கொழும்பு பேராதனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் விவசாய ஆய்விற்கான வசதிகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.