மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பிலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரியவும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.