இன்றைய புனித பொசன் நோண்மதி தினத்தை முனனிட்டு நாடெங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
பொசன் வலயங்களும் அன்னதானசாலைகளும் நாடெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொசன் நோண்மதி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் உள்ள பல்வேறு விகாரைகளிலும் வழிபாடுகள் தியானங்கள் என்பன இடம்பெற்றன. அத்துடன் பொசன் வாரத்தை முன்னிட்டு அநுராதபுரத்திற்கு வருகை தரும் யாத்திரிகளின் நலன்கருதி விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அன்னதானசாலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி தலதா மாளிகையிலும் விசேட நோண்மதி தினத்தை முன்னிட்டு விசேட சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் ஏராளமான பௌத்த பெருமக்கள் கலந்து கொள்கின்றனர். தலதா மாளிகை அருகில் பொசன் பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன.
ஹோமாகம பனாகொட இராணுவ கல்லூரி வளாகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அன்னதானசாலையொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கல்லூரியின் அதிபர் யாப்பா பண்டார தலைமையில் ஐந்தாவது தடவையாக இந்த அன்னதானசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கொழும்பு தெற்கு அலுவலகத்தின் ஏற்பாட்டில் சீனிசம்பல் பான் தானசாலையொன்று நாரஹேன்பிடியில் இடம்பெற்றது. பொசன் நோண்மதி தினத்தை முன்னிட்டு வீடமைப்பு அதிகார சகையினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு கொடி விற்பனையும் இடம்பெற்றது.
வாதுவ பொத்துபிடிய பகுதியில் நீரில் இருந்து மேலே வரும் விதத்திலும் கற்குகையொன்றில் இருந்து வெளியில் வரும் விதத்திலும் பொசன் வெளிச்சக்கூடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.