எதிர்கட்சி தலைவரும் வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய போவதாக தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் 3 மாடி வகுப்பறை கட்டிடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அதன் மூலமே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க கூடிய தீர்க்கமான சக்தியாக மாற முடியுமென்றும் கூறினார். இதற்காக வட கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் மலையக தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.