கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தின வைபவத்தில் பங்கேற்று சங்கைக்குரிய வெண்டறுவே உபாலிஅனுநாயக்க தேரர் முன்வைத்த கருத்து தொடர்பாவே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புத்த பெருமான் ஒருபோதும் ஏகாதிபத்தியத்தைப் போதிக்கவில்லை. ஒற்றுமை, சமாதானம், சமாதானமாக கலந்துரையாடுதல் போன்ற விடயங்களையே போதித்திருக்கின்றார். ஹிட்லர் போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் எந்த இடத்திலும் கூறவில்லை.
ஜேர்மனியிலும் கூட 19ம் நூற்றாண்டில் பௌத்த கருத்துக்களை முன்வைக்கும் ஒரு அமைப்பு உருவானது. அதன் அங்கத்தவர்கள் கூண்டில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அது ஹிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். இவ்வாறு இருக்க ஹிட்லர் போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென்று குறிப்பிட்ட அனுநாயக்கர் கூறுவது கவலைக்குரிய விடயமாகும். இது போன்ற ஒரு கூற்றை நாம் கூறியிருந்தால் இன்று ஊடகங்கள் எங்களை கேள்விகளால் துளைத்திருக்கும். ஹிட்லர் போன்றவர் ஆட்சிக்கு வந்தால் ஊடகங்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அனுநாயக்கரின் கூற்றுத் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கருத்து வெளியிடுகையில், குறிப்பிட்ட அனுநாயக்கர் வெளியிட்ட கருத்தை கண்டிப்பதாகவும் நாட்டிற்கு ஹிட்லர் போன்றவர்களோ, ராணுவ ஆட்சியோ அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார். ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.