கடந்த 19ஆம் திகதி ஹங்வெல்ல-வெலிப்பில்லேவ பிரதேசத்தில் மனைவி மற்றும் மனைவியின் தாயை கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெலிகந்த பகுதியில் தனது உறவினரொருவரின் வீட்டில் மறைந்திருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.