வடகொரியாவின் அணுவாயுத பலம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் வடகொரியாவுக்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க அமெரிக்கா எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்கவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் அணுவாயுத பலம் அசாதாரணமானது மற்றுமன்றி அதி விசேடதன்மைக்குரிய அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை கடந்த 12ம் திகதி சந்தித்ததன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியா தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் திடீரென எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.