நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் வலைப்பின்னலினூடாக இணைக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். திட்டம் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்படும். ஏனைய சுகாதார நிறுவனங்களும் வலையமைப்பிற்குள் உள்வாங்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் ‘ஈ ஹெல்த்’ அட்டை வழங்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி உலக சுகாதார தினத்தன்று முதலாவது ஈ ஹெல்த் அட்டை வழங்கப்பட்டது. எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களுக்கும் ஈ ஹெல்த் அட்டை வழங்கப்படும். 9 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளின் சுகாதார வைத்திய தரவுகள் வலைப்பின்னலுக்குள் உள்ளீடு செய்யப்படும். இவ்வாறான கட்டமைப்பொன்றை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். குறித்த திட்டத்தின் மூலம் நாட்டு மக்களே நேரடி நன்மையடைவரென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.