காஷ்மீர் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தியா அனுமதித்தால் நாங்களும் தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மிர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை தலைமை ஆணையாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு இந்தியா கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.