ஐரோப்பிய ஒன்றியத்தினால் அமெரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் நாளை முதல் அமுல்படுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படவுள்ளது, மோட்டார் சைக்கிள், மதுபானம், டெனிம் உடைகள், இயந்திர படகுகள், சிகரட் உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரியொருவர் இவ்விபரங்களை தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட உலோக பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு வரி விதித்துள்ளது.