ரயிலில் யாசகத்தில் ஈடுபட்டு கொண்டே ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கம்பஹா பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.
தெமட்டகொடயிலிருந்து ரயிலில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கம்பஹா பொலிஸிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இச்சுற்றி வளைப்புஇ டம்பெற்றது. இதனை தொடர்ந்து 13 ஹெரோயின் பக்கட்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். இப்பக்கற்றுக்கள் ஒவ்வொன்றும் ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. .இவர் தனது ஆடையில் மறைத்து வைத்து இவற்றை விற்பனை செய்துள்ளார். இவ் ஹெரோயின் பக்கற்றுக்கள் கிராம பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. 49 வயதான குறித்த பெண் வத்துரகட தெமட்டலந்த பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.