வட இந்தியாவின் நவ்சரி நகரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்திலிருந்து மும்பாய் வரை அதிவேக ரயில்பாதை அமைப்பதற்காக காணிகளை சுவிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிக்கையொன்றை இந்திய மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக குஜராத் மாநிலத்தின் 8 மாவட்டத்தில் காணியை சுவிகரிக்கும் பணியை அதிகாரிகள் ஆரம்பித்தனர். மகல்தாரா கிராமத்தில் காணி அளவிடும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்ற வேறு பல கிராமங்களிலும் இவ்வாறு அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டி வைத்தார். ஜப்பானின் உதவியுடன் தயாராகும் இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.