அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுமென டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். குறித்த உத்தரவுக்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸாரால் ஆயிரத்து 940 பேர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். அவர்களோடு வருகைதந்த ஆயிரத்து 995 சிறுவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறுவர் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் இச்செயற்பாடு மனிதநேயமற்றதென உலகளாவிய ரீதியில் வமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் அல் ஹுஷைன் இதற்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.