அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பொகவந்தலாவை மற்றும் பாணந்துறை பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.