போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் குடும்பத்தினர் மீதும், சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்ட் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவாரென அவர் குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்சில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கை கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ளது. இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்கள் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தமது நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி டுடேர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து மனித உரிமை அமைப்புக்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.