அமெரிக்க – மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த இராணுவ பயிற்சி நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பயிற்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க மற்றும் தென்கொரியாவின் இராணுவ பயிற்சிகள் வலய நாடுகளுக்கு இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், வடகொரியாவுடனான தொடர்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சுமூக நிலைமைகள் காரணமாக ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி நடவடிக்கைகக்கு அவசியமில்லையென தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனால் இணைந்த இராணுவ பயிற்சிகள் முக்கியத்துவம் அளிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க மற்றும் தென்கொரியாவின் குறித்த இணக்கப்பாட்டை வலய நாடுகள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.