வேகமாக பயணித்த காரொன்றில் மோதி பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு அதிகாரி காயமடைந்துள்ளார். இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது கார் மோதியுள்ளது. மாத்தளை – நில்திய உயன பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து பொல்கொல்ல வரை வாகனம் அதிவேகத்தில் பயணித்துள்ளது. இந்நிலையில் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.