பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் இன்றுமுதல் சேவைக்கு திரும்பவேண்டுமென தபால்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தபால் ஊழியர்களுக்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் அவர்கள் பணிக்கு திரும்பாமல், எவ்வித முன் அறிவித்தலுமின்றி சேவைக்கு சமூகமளிக்காமல் இருந்தால் அவர்கள் தானாகவே சேவையிலிருந்து இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.