இங்கிலாந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்களின் இறப்புக்கு பெண் வைத்தியரொருவரே காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜேன் பார்டன் எனும் 69 வயதான குறித்த வைத்தியர் காஸ்போட் போர் வைத்தியசாலையில் சேவையாற்றினார். குறித்த வைத்தியசாலையில் வைத்தியரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த 100 நோயாளர்கள் விஷ ஊசி ஏற்றப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை கைவிட்டனர். இந்நிலையில் தற்போது குறித்த வைத்தியரே நோயாளர்களின் உயிரிழப்புக்கு காரணமென விசாரணைகளை குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.