இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும். சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும், மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
படிக்க 0 நிமிடங்கள்