யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்