13 வருட சான்று பெற்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் அந்நாட்டு பிரதி கல்வி அமைச்சர் பெட்ரி பெல்டோஸ் மற்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கிடையில் இடம்பெற்றுள்ளது. கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.