அரச காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு எல்ப்பிட்டி வத்துரவில பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். 10 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.