இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாக உலக வங்கி தெரிவிக்கிறது. அடிப்படை வசதிகள் தொடர்பில் முதற்கட்டமாக கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அதனூடாக முதலீட்டுக்கான சிறந்த சூழலை உருவாக்க முடியுமென உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தித்திறனை அதிகரிக்கவேண்டிய தேவையும் உள்ளதென உலக வங்கி தெரிவிக்கிறது. புதிய நிர்மாணங்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளை பூர்த்திசெய்தல் அதேபோல் முதலீட்டு அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தவேண்டுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.