வடகொரியாவின் பியாங்யோங் நகரில் மலேசிய தூதரம் திறக்கப்படுமென மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நம் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து மலேசிய பிரதமர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.