காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்கள், காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்துகொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கடந்த மாதம் மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை மாவட்டங்களில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் 21ம் திகதி கிளிநொச்சியிலும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதேச மட்டங்களில் அலுவலகங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய எட்டு அலுவலங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.