ஜப்பானில் இடம்பெற்ற 18வது ஆசிய கனிஷ்ட தடகள சம்பியின் போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று இலங்கை வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் 35 நாடுகளில் இருந்து வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். இலங்கையில் இருந்து 13 பேர் அடங்கிய வீர வீராங்கனைகள் இதில் பங்குபற்றினர். இலங்கை வீரர்கள் மூன்று தங்க பதக்கங்கள், நான்கு வெள்ளி பதக்கங்கள், மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் பிரகாரம் பதக்க பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தை பெற்றது. முதலாவது இடத்தை போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் பெற்று கொண்டது. இப்போட்டியில் இலங்கை வீர வீராங்கனைகள் இரண்டு ஆசிய கனிஷ்ட சாதனைகளையும் ஏற்படுத்தினர். இவர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்.