அம்பாறை மாவட்டம் ஆழையடிவேம்பு திருநாவுகரசு வித்தியாலயத்தில் ஒன்றுகூடல் மண்டபம் இன்மையினால் மர நிழலில் ஐந்தாம் தர புலமை பரிசில் முன்னோடி பரீட்சைகள் நடைபெற்ற துரதிஷ்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
ஆழையடிவேம்பு கல்வி அபிவிருத்தி ஒன்றியம் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பாடசாலையில் இந்த முன்னோடி பரீட்சையை ஏற்பாடு செய்திருந்தது. ஆழையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளை சேர்ந்த 125கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இப்பாடசாலையில் இப்பரீட்சை நடத்தகூடிய மண்டபம் இன்மையினால் மர நிழலின் கீழ் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் பரீட்சைகள் இடம்பெற்றதுடன், 150கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 46 மாணவர்களுக்கு பிரதி கல்வி பணிப்பாளர் வி. குணாலன் தலைமையில் பரிசில்களும் வழங்கப்படடன. இப்பாடசாலை வளாகத்தில் 1954ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்றுகூடல் மண்டபம் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது. பாடசாலைக்கு புதிய மண்டபம் ஒன்றை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லையென பாடசாலை அபிவிருத்தி குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி கல்வி பணிப்பாளர் வி. குணாலன் இப்பாடசாலை தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்தார்.