பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரன் 40 மணிநேரம் தொடர்ந்து கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி ஆரம்பமான இவரது உலக சாதனை கச்சேரி நிகழ்ச்சி இன்று பத்தாம் திகதி காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இவ்வுலக சாதனை இசை நிகழ்ச்சி வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து இடைவிடாடமல் மரதன் உலக சாதனை முயற்சியாக இச்சாதனை இடம்பெற்றது. சாவகச்சேரியை சேர்ந்த ஸ்ரீ ஆருரன் தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற சங்கீத வித்துவான் ஆவார். ஏற்கனவே இந்தியாவில் 20 மணித்தியாலயம் தொடர்ந்து இசை கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். அதனை இலங்கையை சார்ந்த ஒருவர் முறியடித்துள்ளமைக்காக நூற்றுக்கணக்கானோர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.