நாட்டை சூழவுள்ள வானிலையில் அடிப்படையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
கரையோர பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு ,தெற்கு, மத்திய , வட மேற்கு மாகாணங்களிலும் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்
அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையினால் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்து அமுலிலிருப்பதாக இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.