மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவசர பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக சென்ற போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடி 6 ஆம் குறிச்சியிலுள்ள வீடொன்றில் வைத்தே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டை நடத்திய நபர் அப்பகுதியிலுள்ள சிலரை வாளினால் வெட்டியதாகவும் இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.