அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்தோஷா தீவில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இச்சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முதலில் மேற்கொள்ளப்பட்டன. இச்சந்திப்பு இடம்பெறும் இடம் குறித்து ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இச்சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.