பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவின் மகன் மற்றும் மகள் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு கோரல் நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த இருவரும் தமது வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளனர். எதிர்வரும் 22ம் திகதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கமைய ஜுலை மாதம் 25ம் திகதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.