ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டம் கட்சியின் தற்காலிக தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும், தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பா.உ. நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, டப்லியூ.டி.ஜே செனவிரத்ன மற்றும் அநுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோர் சிரேஷ்ட துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக பொருளாளராக எஸ்.பீ திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.